/* */

புதுச்சத்திரம் பகுதியில் ரூ. 2.71 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கம்

Project Work -புதுச்சத்திரம் பகுதியில் ரூ. 2.71 கோடி மதிப்பில் திட்டப்பணிக ராமலிங்கம் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

Project Work | Namakkal News
X

நாமக்கல் மாவட்டத்தில் ராமலிங்கம் எம்.எல்.ஏ. மரக்கன்று நட்டினார்.

Project Work -புதுச்சத்திரம் பகுதியில் ரூ. 2.71 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை எம்.எல்.ஏ. ராமலிங்கம் துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம் திருமலைப்பட்டி, கதிராநல்லூர், லக்கபுரம், ஏளூர், காரைக்குறிச்சி, கொக்கரைநாயக்கனூர், பெரியதொட்டிப்பட்டி. குதிரைசேனம்பட்டி ஆகிய பகுதிகளில், ரோடுகள், கழிவுநீர் கால்வாய், ரேசன் கடை, அங்கன்வாடி மையம், மகளிர் ஓய்வு அறை அமைப்பதற்கு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் எம்.எல்.ஏ. தொகுதி வளர்ச்சி நிதி மூலம் ரூ. 2.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி, பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தி தலைமை வகித்தார். பி.டி.ஓ. தனம் முன்னிலை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். ஒன்றிய துணைத்தலைவர் ராம்குமார், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் துரை ராமசாமி, கவுதம், செயற்பொறியாளர் மாதேஷ்வரன், உதவி செயற்பொறியாளர் கல்பனா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 3 Oct 2022 6:45 AM GMT

Related News