/* */

நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1 கோடி மதிப்பில் பருத்தி ஏல விற்பனை

நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1 கோடி மதிப்பில் பருத்தி ஏல விற்பனை நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1 கோடி  மதிப்பில் பருத்தி ஏல விற்பனை
X

பைல் படம்

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சொசைட்டியில் (என்சிஎம்எஸ்) வாரம்தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு, நாமக்கல், சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம் மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் 2,800 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். சேலம், திருச்செங்கோடு, கொங்கானபுரம், ஈரோடு, அவினாசி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.

ஏலத்தில், ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10,399 முதல் ரூ.13,950 வரையிலும், டி.சி.எச் ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9,769 முதல் ரூ.12,949 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6,098 முதல் ரூ.8,400 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 கோடி மதிப்பில் பருத்தி ஏல விற்பனை நடைபெற்றது

Updated On: 18 May 2022 2:00 AM GMT

Related News