Begin typing your search above and press return to search.
ஈரோடு அட்சயம் அறக்கட்டளைக்கு ஜே.கே.கே.ரங்கம்மாள் அறக்கட்டளை நிதி உதவி
குமாரபாளையம் ஜே.கே.கே.ரங்கம்மாள் அறக்கட்டளையின் சார்பில், ஈரோடு அட்சயம் அறக்கட்டளைக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
குமாரபாளையம், ஜே.கே.கே.ரங்கம்மாள் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் செந்தாமரை மற்றும் ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களின் இயக்குநர் எஸ்.ஓம்சரவணா ஆகியோர் அறக்கட்டளையின் சார்பில் ரூ.1.20 லட்சம் நிதி உதவியை, ஈரோட்டில் இயங்கி வரும் அட்சயம் அறக்கட்டளைக்கு, மீட்டெடுக்கப்பட்ட யாசகர்களுக்காக, ஈரோடு, நசியனூரில் புதிதாக கட்டப்பட உள்ள மறுவாழ்வு இல்லப்பணிக்காக வழங்கினார்கள்.
இந்த நிதி உதவிக்கான காசோலையை அட்சயம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் நவீன்குமார் பெற்றுக்கொண்டார்.