விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கக் கோரி நாகையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
டிசம்பர்- ஜனவரி மாதம் பெய்தமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
HIGHLIGHTS
பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி நாகையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, டெல்டா மாவட்டங்களில் தாலுக்கா அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அதிமுக அறிவித்தது. இந்நிலையில் டிசம்பர் மாதத்திலும், ஜனவரி மாதத் தொடக்கத்திலும் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் அதிகாரிகள் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட வலியுறுத்தியும் நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை அவுரித்திடலில் முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டு தமிழக அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயபால், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்க கதிரவன்,திருமருகல் ஒன்றிய குழு தலைவர் இராதாகிருட்டிணன உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் கீழ்வேளூர், திருக்குவளை உள்ளிட்ட வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.