Begin typing your search above and press return to search.
நாகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
நாகையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் போலீசார் ஹெல்மெட் அணிந்தவாறு இருசக்கர வாகனத்தில் சென்று மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
32வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நாகையில் இன்று நடைபெற்றது. அவுரித்திடலில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியை மாவட்ட துணை ஆட்சியர் பிரசாந்த் கொடியசைத்து துவங்கி வைத்தார். விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் போலீசார் இரு சக்கர வாகனத்தில் சென்றவாறு ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். பின்னர் இரு சக்கர வாகன பேரணியானது நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.