பத்ம விருதுகள்: தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
பத்ம விருதுகள் பெற தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்
HIGHLIGHTS
இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மேன்மை பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசாங்கம் பத்ம விருதுகளை (பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ) அறிவித்துள்ளது. கலை, அறிவியல், இலக்கியம், மருத்துவம், கல்வி, விளையாட்டு, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு 2022 ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 2022ம் ஆண்டு குடியரசு தினவிழாவின் போது, இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுகள், தொழில், இனம், உத்தியோகம், பாலினம் ஆகிய வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் தொடர்பான விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். எனவே, தகுதியுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.