/* */

காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு உடை அணியாமல் கொரோனா பரிசோதனை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு உடை அணியாமல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் மருத்துவ ஊழியர்களால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு உடை அணியாமல் கொரோனா பரிசோதனை
X

காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு உடை அணியாமல் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனை 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் காவேரிப்பட்டணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தினமும் சுமார் 50க்கும் அதிகமானோர் கொரோனா பரிசோதனைசெய்து கொள்ள வந்து செல்கின்றனர்.

இங்கு கொரோனா பரிசோதனை செய்யும் மருத்துவ ஊழியர்கள், அரசு விதிகளை மீறி பாதுகாப்பு உடை அணியாமல் பொதுமக்களிடம் கொரோனா பரிசோதனை செய்கின்றனர். பாதுகாப்பு உடை அணியாமல் மருத்துவ ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்வதால், கொரோனா பரிசோதனைக்கு வரும் பொதுமக்களில், யாருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால், அதன் மூலம் அனைவருக்கும் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 29 May 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  3. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  5. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  6. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  9. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  10. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!