உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் விழிப்புணர்வு பேரணி
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
HIGHLIGHTS
ஆண்டுதோறும் டிசம்பர் 1ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், எயிட்ஸ் விழிப்புணர்வு பேரணி, அரசுக் கல்லுரி மற்றும் தனியார் கலைக் கல்லூரி மாணவ மாணவியர் சார்பில் நடைப்பெற்றது.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே துவங்கிய விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சியர் ஜெயசத்திரபானு ரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர், அரசு மருத்துவக்கல்லூரி டீன், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த பேரணி, நகரின் முக்கிய சாலைவழியாக சென்றது. பொதுமக்கள் மத்தியில் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ மாணவியர் கையில் ஏந்தியபடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரணியில் கல்லூரி மாணவ மாணவியருடன், பொதுமக்களும் ஆர்வமுடன் கலத்து கொண்டனர்.