மிதி வண்டியில் சென்று வாக்கு சேகரித்த தேமுதிக வேட்பாளர்
கரூர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் கஸ்தூரியின் என்.தங்கராஜ் இன்று சைக்கிளில் சென்று பொதுமக்களிடம் நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.
கரூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் இடையில் தேர்தல் பரப்புரை உச்ச கட்ட பரபரப்பில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த தொகுதியில் தேமுதிக அமமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் கஸ்தூரியின் என். தங்கராஜ் தீவிரமாக சைக்கிளில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா காலத்தில் கேப்டன் தனது திருமண மண்டபம், கட்சி அலுவலகத்தை மருத்துவமனையாக பயன்படுத்த அனுமதி அளித்தார். 40 ஆண்டுகாலம் சினிமாவில் சம்பாதித்த விஜயகாந்த் பொது மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி உள்ளார் எனவே ஆட்சி மாற்றம் ஏற்பட தேமுதிக அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள் என அவர் வாக்கு சேகரித்தார்.