Begin typing your search above and press return to search.
அமைச்சர் செந்தில்பாலாஜி கூட்டாளிக்கு 'லக்'! கரூர் துணை மேயரானார்
அமைச்சர் செந்தில்பாலாஜியின் கூட்டாளியான தாரணி சரவணன், கரூர் துணை மேயராக பதவியேற்றார்.
HIGHLIGHTS
தமிழக மின்சாரத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜியுடன், அதிமுக, அமமுக கட்சியில் பயணித்த அவரது நண்பரும்., தொழிற்கூட்டாளியுமான தாரணி சரவணன், கடந்த இரண்டாம் தேதி கரூர் மாமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், நேற்று மாலை கரூர் மாநகராட்சி அலுவலகத்தில், துணை மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில், திமுக தலைமை அறிவிப்பினை தொடர்ந்து, தாரணி சரவணன் துணை மேயராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு வீரவாள் கொடுத்து கெளரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் திமுக பிரமுகர்கள் என்று பலரும் கலந்து கொண்டு தாரணி சரவணன் அவர்களை வாழ்த்தினர்.