/* */

குமரியில் கும்பம், முளைப்பாரியுடன் நடைபெற்ற கோவில் திருவிழா

குமரியில் கும்பம், முளைப்பாரியுடன் நடைபெற்ற அம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபட்டனர்.

HIGHLIGHTS

குமரியில் கும்பம், முளைப்பாரியுடன் நடைபெற்ற கோவில் திருவிழா
X

கன்னியாகுமரி பத்ரகாளியம்மன் விழாவில் பெண்கள் முளைப்பாரி, கும்பம் எடுத்து வந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவிற்கு உட்பட்ட செண்பகராமன்புதூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா நடைப்பெற்று வருகிறது.

பரம்பரை பரம்பரையாக அனைத்து சமூகத்தினரும் சேர்ந்து நடத்தும் இந்த திருவிழாவில் பாரம்பரிய முறைப்படி பத்ரகாளி அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் வீதி உலா வந்தனர்.

அப்போது நேர்த்திக்கடனாக முளைப்பாரி, கும்ப நீர் எடுத்து வீதிகளில் ஊர்வலமாக வந்த பக்தர்கள் மீண்டும் கோயிலுக்கு வந்தனர். தொன்று தொட்டு நடைப்பெற்று வரும் இந்த திருவிழாவில் முளைப்பாரி எடுத்து வரும் வழிபாடு சிறப்பு வாய்ந்தது. இதில் பெண்கள் விரதமிருந்து நேர்த்திக்கடனாக கும்பம் மற்றும் முளைப்பாரியை தலையில் எடுத்து மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்தனர்.

இந்த சித்திரை திருவிழா வழிபாட்டை காண தோவாளை, ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், தாழக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர்.

Updated On: 22 April 2022 9:01 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  2. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  4. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  5. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  6. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  7. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  10. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்