/* */

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆகஸ்ட் 16 ல் புஷ்பாபிஷேகம்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆகஸ்ட் 16 புஷ்பாபிஷேகம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.

HIGHLIGHTS

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆகஸ்ட் 16  ல் புஷ்பாபிஷேகம்
X

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாக அமைந்துள்ளது கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் அமைந்துள்ள தாணுமாலயன் சுவாமி கோவில். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் ஒன்றாக அமைந்துள்ள இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் கடைசி திங்கட்கிழமை கோவிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் புஷ்பாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான புஷ்பாபிஷேக விழா ஆகஸ்ட் 16 ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெறுகிறது, அன்று மாலை கோவிலில் நடைபெறும் நித்திய காரிய பூஜைகள் முடிந்த பின் புஷ்பாபிஷேகம் நடைபெறும். தட்சணாமூர்த்தி, கொன்றையடி, தாணுமாலய சன்னதி, திருவேங்கட விண்ணவரம் பெருமாள், நவக்கிரக மண்டபம், கைலாசநாதர் , சாஸ்தா ராமர் சன்னதி மற்றும் 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் உட்பட அனைத்து சுவாமிகளுக்கும் புஷ்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த தகவலை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் இதற்கான முன் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

Updated On: 14 Aug 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!