Begin typing your search above and press return to search.
பணி முடிந்து வந்த இராணுவ ஜாவானுக்கு உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்
இந்திய இராணுவத்தில் பணியாற்றி பணியை முடித்து சொந்த ஊர் வந்த வீரருக்கு ஊர் மக்கள் ஒன்று கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெட்டுர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், இந்திய ராணுவத்தில் ஜவானாக பணியில் சேர்ந்து தன்னுடைய பணியினை தற்போது நிறைவு செய்துவிட்டு இன்று சொந்த ஊருக்கு வந்தடைந்தார்.
அவருக்கு அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், குடும்பத்தார், நண்பர்கள் மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
மேலும் நாகர்கோவில் மாநகர அதிமுக சார்பிலும் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் நாட்டிற்காக உழைத்த வீரரை வரவேற்று நன்றி தெரிவித்தனர்.