/* */

குமரியில் புறா வளர்ப்பை ஊக்குவிக்க போட்டி: கேடயம், பரிசுத் தொகை வழங்கல்

குமரியில் புறா வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் போட்டி நடத்தி வெற்றி கேடயங்களும், பரிசு தொகையும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

குமரியில் புறா வளர்ப்பை ஊக்குவிக்க போட்டி: கேடயம், பரிசுத் தொகை வழங்கல்
X

புறாக்கள் (பைல் படம்)

பண்டைய காலத்தில் தொலைபேசி, செல்போன், இன்டர்நெட் போன்ற எந்த தகவல் தொடர்பு உபகரணங்களும் இல்லாத மன்னர் காலம் தொட்டு, தகவல் தொடர்புக்காக மட்டும் அல்லாமல் மனித வாழ்க்கையுடன் ஒன்றிய ஒரு பறவையாக புறாக்கள் இருந்து வந்தன.

புத்தி கூர்மையுடன் உயரமாகவும் வேகமாகவும் பறக்கும் புறாக்கள் இல்லாத வீடு இல்லை என்ற நிலை மாறி தற்போது புறாக்களை காண்பது அரிது என்ற நிலை வந்துள்ளது.

பல்வேறு இடங்களில் புறாக்களை வரை படங்களிலும், தொலைகாட்சி மற்றும் சினிமாக்களில் பார்க்கும் நிலையே இருந்து வருகிறது.

இந்நிலையில் நாகர்கோவிலை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சவுத் இந்தியன் டிப்ளர் சொசைட்டி அமைப்பானது புறா வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வருடம் தோறும் புறா வளர்க்கும் கலைஞர்களை ஒன்றிணைத்து வரும் இந்த அமைப்பானது புறா விடுதல் போட்டியை நடத்தி அதில் வெற்றி பெறும் கலைஞர்களுக்கு பரிசுகளும் அளித்து புறா வளர்ப்பை ஊக்கப்படுத்தி வருகிறது.

இதனிடையே இந்த அமைப்பு சார்பில் 4வது ஆண்டாக நாகர்கோவிலில் புறா விடுதல் போட்டி நடத்தப்பட்டது. அதன்படி 30 மணி நேரம், 20 மணி நேரம், 15 மணி நேரம், 10 மணி நேரம் என 4 பிரிவுகளில் புறா பறக்கவிடும் போட்டி நடத்தியது.

மேலும் அதில் வெற்றி பெரும் புறாக்களை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு வெற்றி கேடயங்களும், பரிசு தொகையும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில கழக அமைப்பு செயலாளருமான பச்சைமால், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு வெற்றி கேடயங்களையும், பரிசு தொகையையும், பரிசு பொருட்களையும் வழங்கி பாராட்டினார்.

Updated On: 29 Nov 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  3. நாமக்கல்
    கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா
  4. ஒட்டன்சத்திரம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த எலுமிச்சை...
  5. சோழவந்தான்
    மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட...
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை உலக அன்னையர் தின விழாவில் நடந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி
  7. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்
  8. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  9. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  10. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு