/* */

குமரியில் அதிமுக வேட்பாளர்கள் மீது வழக்கு பதிவு: தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கண்டனம்

குமரியில் அதிமுக வேட்பாளர்கள் மீது 110 ன் படி வழக்கு பதிவு செய்யும் காவல்துறைக்கு தளவாய் சுந்தரம் கண்டனம் தெரிவித்தார்.

HIGHLIGHTS

குமரியில் அதிமுக வேட்பாளர்கள் மீது வழக்கு பதிவு: தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கண்டனம்
X

அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் பேரூராட்சிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு கன்னியாகுமரி எம்எல்ஏ தளவாய் சுந்தரம் செய்தியாளர்களை சந்தித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை குறி வைத்து அவர்கள் மீது காவல்துறையினர் 110 வழக்கு பதிவு செய்து மிரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் பேரூராட்சிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது குமரி மாவட்ட காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறும் போது குற்றத்தை தடுக்க வேண்டிய காவல் துறை குற்றவாளிகளை உருவாக்குகிறது.

மேலிடத்தில் இருந்து அழுத்தம் வருவதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவிப்பது கண்டனத்துக்கு உரியது. குமரியில் அதிமுக வேட்பாளர்கள் மீது 110 ன் கீழ் வழக்கு பதிவு செய்வதை காவல்துறை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இல்லையென்றால் அதிமுக வேட்பாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என எச்சரித்தார். மேலும் தினந்தோறும் ஒவ்வொரு விதமாக அறிவிக்கை விடுவது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடாக உள்ளது எனவும் விமர்சித்தார்.

அப்போது முன்னாள் அமைச்சரும், அதிமுக கழக மாநில அமைப்பு செயலாளருமான பச்சைமால், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Updated On: 4 Feb 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  7. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  8. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  9. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  10. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?