/* */

பிரசித்தி பெற்ற கோவிலில் 2 வது முறையாக கொள்ளை : போலீசார் விசாரணை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான தேவி முத்தாரம்மன் கோவிலில் 2 வது முறையாக கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

பிரசித்தி பெற்ற கோவிலில் 2 வது முறையாக கொள்ளை : போலீசார்  விசாரணை.
X

நாகர்கோவில் அருகே வடலிவிளை பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற தேவி முத்தாரம்மன் கோவில்.2 வது முறையாக கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வடலிவிளை பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற தேவி முத்தாரம்மன் கோவில்.

இந்த கோவிலில் வழிபாடு செய்யும் பக்தர்கள் தங்கள் குறைதீர்க்கும் தெய்வமாக தேவி முத்தாரம்மனை வணங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்த கோவிலில் இரண்டாவது குறையாக கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது.

அதன்படி கோவிலில் நித்திய வழிபாடுகளை முடித்து வீடு திரும்பிய பூஜாரி காலையில் வந்து பார்க்கும் போது கோவில் திறந்து இருப்பதையும், கோவிலில் இருந்த 10 பவுன் தங்க நகை ஆபரணங்கள் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் கொள்ளை போய் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடம் வந்த கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 3 மாதங்களுக்கு முன் கோவிலில் புகுந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Updated On: 14 July 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  2. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  4. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  5. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  6. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  7. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  8. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  9. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  10. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!