காஞ்சிபுரத்தில் காய்கறிகள் விலை மும்மடங்கு உயர்வு: மக்கள் அதிர்ச்சி!
காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலையை மும்மடங்காக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் கொரோனா பெறவை தடுப்பு நடவடிக்கையாக கடந்த 10ஆம் தேதி முதல் நாளை 24 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது.
இதனை தவறாக பயன்படுத்திய பொதுமக்கள், அதிகளவில் விதிமுறைகளை மீறி சுற்றியதால் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்பட்டது. இதனால் நேற்று தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதத்தில் ஊரடங்கை மேலும் கடுமையாக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று முழுவதும் அனைத்து கடைகளும் பொதுமக்கள் வசதிக்காக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வில்லா முழு ஊரடங்கு செயல்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தையில் பொதுமக்கள் அதிகம் கூடியதால் வியாபாரிகளின் காய்கறி விலைகளை நேற்றைய விலையிலிருந்து இருமடங்கு , மும்மடங்காக உயர்த்தியதால் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சியுற்றனர்.
வாழ்வாதாரம் இழந்து பொது மக்கள் அல்லல்படும் நிலையில் இதுபோன்று சூழ்நிலையை பயன்படுத்தி வியாபாரிகள் விலையை ஏற்றி வியாபாரம் செய்தது கண்டன செயலாக உள்ளது.