டிடிஎப்வாசனுக்கு நவம்பர் 9ம் தேதி வரை காவல் நீட்டிப்பு
பாலு செட்டி சத்திரம் அருகே சாலை விபத்தில் சிக்கிய டிடிஎப்வாசனுக்கு நவம்பர் 9ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
பிரபல யூட்யூபில் இருசக்கர வாகன சாகச வீரருமான டிடிஎப் வாசன் நீதிமன்ற காவலினை நவம்பர் 9ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி இனியா கருனாகரன் உத்தரவிட்டார்.
பிரபல யு டியூப்பரும், இருசக்கர சாகச வீரருமான வீடியோ கடந்த செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது விபத்தில் காயம் அடைந்தார்.
இதுகுறித்து பாலு செட்டி காவல்துறையினர் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து செப்டம்பர் 19ஆம் தேதி காலை கைது செய்து காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் நீதிபதி இனியா கருணாகரன் முன் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், புழல் சிறையில் 15 நாள் அடைக்க உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து மூன்று முறை அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்த நிலையில் இன்று காவல் முடிவடையும் நிலையில் புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் நீதிபதி முன் ஆச்சரியப்படுத்தப்பட்ட நிலையில் நீதிபதி இனியா கருணாகரன் நவம்பர் 9ஆம் தேதி வரை அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.
நான்காவது முறையாக இந்த காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தபோது அதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்து அவரது மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.