காஞ்சிபுரத்தில் இன்று (18ம் தேதி) : 250 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 250 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா நோயை தடுப்பதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுப்பூசி தினந்தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செலுத்தப்படுவது மட்டுமல்லாமல் அவ்வப்போது மெகா தடுப்பூசி முகாம்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியினை 7 இலட்சத்து 15 ஆயிரத்து 617 பேரும், 2 லட்சத்து 99 ஆயிரத்து 768 நபர்கள் இரண்டாம் தவணையும் இதுவரை செலுத்திக் கொண்டு உள்ளனர்.
மேலும் இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 485 நபர்களுக்கான சிறப்பு முகாம் இன்று மாவட்டம் முழுவதும் 250 இடங்களில் செயல்பட உள்ளது.
இதனை முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தத் தவறிய நபர்கள் விரைவாக செலுத்திக் கொண்டு மற்ற நபர்களுக்கு பாதுகாப்பாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.