லாரியை வழிமறித்து ரூ 3.5 லட்சம் வழிப்பறி
கர்நாடக மாநிலம் பெங்களூரு பக்கோடா பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை 6 மணியளவில் பெங்களூருவிலிருந்து ரோஜாப்பூக்களை ஏற்றிக்கொண்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிகாலை ஒரு மணியளவில் சென்றுவிட்டு மீண்டும் அதிகாலை 3மணிக்கு பெங்களூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே உள்ள சின்னையன் சத்திரம் பகுதியில் கடந்த போது இவரை முந்திக்கொண்டு ஒரு கார் வழிமறித்தது. அதிலிருந்து இறங்கிய மூன்று நபர்கள் லாரி கண்ணாடியை உடைத்து லாரி டிரைவரிடமிருந்த ரூபாய் 3.5 லட்சம் ரூபாயை பறித்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.
இதுகுறித்து லாரி ஓட்டுநர் ராஜசேகர் காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறி சம்பவம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.