டோக்கன்களில் விவரங்கள் பதிவு செய்யாமல் வழங்கும் காஞ்சிபுரம் ரேஷன் கடை ஊழியர்கள்
13 வகையான கொரோனா நிவாரண மளிகை பொருட்கள் பெறுவதற்கான டோக்கனில் எந்தவித பதிவும் இல்லாமல் வழங்கும் ரேஷன் கடை ஊழியர்கள்
HIGHLIGHTS
கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ள நிலையைக் கருத்தில் கொண்டு இன்று முதல் நியாயவிலை கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு 13 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
வரும் 5-ஆம் தேதி முதல் அட்டைதாரர்கள் தங்களுக்குரிய நியாயவிலை கடைகளில் டோக்கன்கள் கொடுத்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் நாள் ஒன்றுக்கு 700 அட்டைதாரர்களுக்கு மட்டுமே அனுமதி எனவும் அறிவிக்கப்பட்டிந்தது
இந்நிலையில் இதற்கான டோக்கன் வழங்கும் பணியை துவக்கிய ரேஷன் கடை ஊழியர்கள், அந்த டோக்கனை எந்தவித பதிவுகளும் செய்யாமல் அச்சடித்து வந்த டோக்கனை அப்படியே வீடு வீடாக சென்று அட்டைதாரர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
சில ஊழியர்கள் அதில் நாள் மற்றும் நேரம் மட்டுமே குறிப்பிட்டு வழங்குகின்றனர் . இந்த டோக்கன்களில் குடும்ப அட்டைதாரர்கள் பெயர் , கார்டு எண் எந்த விவரமும் பதிவு செய்யாமல் அலட்சியமாக அப்படியே வழங்கி வருகின்றனர்.