காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குசாவடிகளை தயார்படுத்தும் பணிகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சாவடி மையங்களை தயார்படுத்தும்பணி தீவீரமாக நடந்து வருகிறது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 2 நகராட்சிகள் 3 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 156 பதவிகளுக்கு 814 நபர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுக்காக 384 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 3 லட்சத்து 63 ஆயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த உள்ளனர்.
இந்நிலையில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பொறியியல் உறுப்பு கல்லூரியிலும் , மாங்காடு நகராட்சிகளுக்கு மாதா பொறியியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் பதட்டமான வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் பார்வையாளர் கற்பகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை வரிசைப்படுத்தி ஒன்றன்பின் ஒன்றாக மேற்கொண்டு வருகின்றனர் அவ்வகையில் வாக்கு சாவடியை சுற்றி நூறு மீட்டர் எல்லைக்கோடு வரையப்பட்டுள்ளது.
மேலும் வாக்கு சாவடி மையங்களில் குடிநீர் வசதி , கழிவறை , சாய்தளம் ஆகியவற்றை உறுபதிபடுத்தும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.