காஞ்சிபுரம் மாநகராட்சி: பாமக தனித்து போட்டி. மாம்பழம் இனிக்குமா?
காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாமக தனியாக மாநகராட்சி தேர்தலில் களம் காண்கிறது
HIGHLIGHTS
காஞ்சிபுரம் பெருநகராட்சியாக இருந்த நிலையில் தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக மாறிய பின் நடைபெறும் முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. பிப்ரவரி 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி இன்று மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது.
மொத்தம் 51 வார்டு பதவிகளுக்கு 409 நபர்கள் வேட்பு மனு செய்துள்ளனர். இதில் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் தனித்து போட்டியிடும் பாமக நிறுவனர் டாக்டர். ராமதாஸ் அறிவித்தார்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கன்னியப்பன் 36 வார்டிலும், நாராயணமூர்த்தி 34 வார்டிலும், சூர்யா 42வது வார்டு, கதிர்வேலன் 50வது வார்டிலும், அமுதா 19வது வார்டிலும், சண்முகம் சரஸ்வதி 10வது வார்டிலும், செல்வராஜ் 44 வது வார்டிலும், நாகராஜ் முதல் வார்டிலும் , ஜானி 48 வது வார்டிலும் , தியாகு 14 வார்டில் என மொத்தம் 41 பேர் பாமக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் பகுதியில் கணிசமான வாக்கு, இளைஞர்களை அரவணைக்கும் மாவட்ட செயலாளர் மகேஷ்குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் உமாபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலாம்மாள், செவிலிமேடு செல்வராஜ் என அனுபவங்கள் கொண்டவர்கள் உள்ளதால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனியாக தேர்தல் களம் காணும் நிலையில், உற்சாகத்துடன் பணியாற்றி மாம்பழத்தை இனிக்க செய்வார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
படவிளக்கம்- வேட்புமனு தாக்கல் செய்யும் பாமக வேட்பாளர் கன்னியப்பன் மற்றும் பாமக வேட்பாளர்கள்