அருள்மிகு ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக விழா
அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய முதலாம் இராஜ கோபுர விமான மஹா கும்பாபிஷேகம் விழா கடந்த 7ஆம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம், வணிகர் வீதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆலயம். இந்த ஆலயத்தின் புனராவர்தன, ஜீர்ணோத்தாரண நூதன ராஜகோபுர நிர்மாண ரஜபந்தன மஹா கும்பாபிஷேக விழா கடந்த 7ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது.
தொடர்ந்து நான்கு கால பூஜைகளும் வேத விற்பன்னர்களால் ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு 50க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேள்வி பூஜை செய்தனர். இதன் நிறைவாக இன்று காலை 5 மணிக்கு நான்காம் கால பூஜை தொடங்கி விசேஷ திரவிய ஹோமம் மகா சங்கல்பம் நடைபெற்ற மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் இசையுடன் யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு ராஜகோபுரம் மற்றும் படவேட்டம்மன், பச்சையம்மன், விநாயகர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவர் பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவினையொட்டி பக்தர்களுக்கு பிரசாதங்கள் , அன்னதானங்கள் வழங்கப்பட்டது.