4ம் நாள் உற்சவத்தில் சேஷ வாகனத்தில் வைகுந்தப் பெருமாள் எழுந்தருளல்.
காஞ்சிபுரம் ஸ்ரீ கமலவல்லி ஸமேத வைகுந்தப் பெருமாள் திருக்கோயில் இன்று காலை சேஷ வாகனம் , மாலை சந்திரபிரபை வாகனத்தில் வீ\தி உலா
HIGHLIGHTS
கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வைணவத் தலங்களில் ஒன்றானது ஸ்ரீ கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் திருக்கோயில். இந்திய தொல்லியல் துறையும் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்திருக்கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த வியாழக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த மூன்று நாட்களாக பல்வேறு வாகனங்களில் எம்பெருமான் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அவ்வகையில் இன்று நான்காம் நாள் சேஷ வாகனத்தில் சிறப்பு திருமஞ்சனத்துக்கு பிறகு எழுந்தருளி பக்தர்களுக்கு கோபுர தரிசனம் அளித்தார். சிறப்பு தீபாரதனைக்கு பின் நான்கு ராஜ வீதியில் இரண்டு திருக்குடைகள் உடன் சேஷ வாகனத்தில் வலம் வந்தார். பிரமோற்சவ விழாவினை ஒட்டி வழியெங்கும் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.