Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரம் ஸ்ரீ பாண்டுரங்க வேணுகோபாலசாமி பஜனை கோவில் மகா கும்பாபிஷேகம்
சேக்குப்பேட்டை சாலியர் தெருவில் புனரமைக்கப்பட்ட ஸ்ரீ வேணுகோபாலசாமி பஜனை மடம் இன்று ஸ்மோரோஷ்னம் நடைபெற்றதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
HIGHLIGHTS
கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் சேக்குப்பேட்டை சாலியர் தெருவில் பல்லாண்டு காலமாக ஸ்ரீ வேணுகோபால வேணுகோபால பக்த ஜன சபா சார்பில் பஜனை மடம் செயல்பட்டு வருகிறது.
இதை அப்பகுதி பக்தர்கள் ஒருங்கிணைந்து புதுப்பிக்கும் பணியை கடந்த ஆண்டு துவக்கி நிறைவு செய்தனர். அதனைத் தொடர்ந்து இன்று காலை சிறப்பு தியாக கால பூஜை உடன் துவங்கி முகப்பு விமானம் மற்றும் ஸ்ரீ வேணுகோபால சாமிக்கு சிறப்பு மகா கும்பாபிஷேகம் விழா வேத விற்பனர்களால் புனிதநீர் ஊற்றபட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். பக்தர்கள் வெண்பொங்கல் , புளியோதரை, சேகரி பிரசாதங்களாக வழங்கப்பட்டது.