/* */

காஞ்சிபுரம் மின்வாரிய தொழிலாளர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்!

காஞ்சிபுரம் மின் தொழிலாளர்களுக்கான தடுப்பூசி முகாமை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மின்வாரிய தொழிலாளர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்!
X

காஞ்சிபுரம் மின் தொழிலாளர்களுக்கான தடுப்பூசி முகாமை சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை உருவாகி நாள்தோறும் ஆயிரக்கானக்ணோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தி மத்திய மாநில அரசுகள் அறிவித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

அவ்வகையில் தொழிற்சாலை பணியாளர்கள் , அரசு ஊழியர்கள் , மின் வாரிய பணியாளர்கள் என பல தரப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது வருகிறது.

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள தலைமை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் 200 மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் நிலையில் அவர்களுக்கென சிறப்பு முகாம் நடத்த காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் உத்தரவிட்டத்தின் பேரில் இன்று அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

மின் வாரிய ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணியினை எழிலரசன் துவக்கி வைத்து ஊழியர்களிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மின்வாரிய அதிகாரிகள் , துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்..

Updated On: 27 May 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  3. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  4. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  5. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  8. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  9. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  10. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?