700 நபர்களுக்கு காஞ்சிபுரம் எம்எல்ஏ நலத்திட்ட உதவிகள்.
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பல்வேறு சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் வழங்கினார்
HIGHLIGHTS
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் மு கருணாநிதியின் 98வது பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி பி எம் பி எழிலரசன் பல்வேறு சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
காஞ்சிபுரம் டி.கே. நம்பித் தெருவில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதில் தமிழ்நாடு மருத்துவ சமூக நலச் சங்க உறுப்பினர்கள் - 300 நபர்கள்,தமிழ்நாடு சூரியகுலம் வண்ணார் சங்க உறுப்பினர்கள் - 150 நபர்கள், அமீது அல்லியா நகர் குடியிருப்போர் நலச்சங்க உறுப்பினர்கள் - 125 நபர்கள், ஒலிமுகமதுபேட்டை இளைஞர்கள் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் - 125 நபர்கள் என மொத்தம் 700 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட அவைத்தலைவர் திரு. சி.வி.எம்.அ.சேகரன், நகர கழக நிர்வாகிகள், கழக அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.