காஞ்சிபுரம்: நள்ளிரவில் அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ எழிலரசன் ஆய்வு
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு எழிலரசன் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ளது காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள் மற்றும் புறநோயாளியாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இம்மருத்துவமனையில் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து பொதுமக்கள் 40க்கும் மேற்பட்ட பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தொடர் விடுமுறை மற்றும் தீபாவளி பண்டிகையை வருவதையொட்டி அவசர விபத்து சிகிச்சை பிரிவு , மகளிர் மகப்பேறு மருத்துவப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் இரவு நிலையங்களில் போதிய மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் உள்ளனரா என காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியிடம் மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை முறைகளும் , மருத்துவர் செவிலியர்களுக்கு போதுமான மருந்துகள் இருப்பு உள்ளதா எனவும் இன்னும் சில தினங்களில் தீபாவளி கொண்டாட வருவதை ஒட்டி தீப்புண் ஏற்பட்டால் அதற்கு அளிக்கக்கூடிய சிகிச்சை முறைகளும் போதிய நிபுணர்களும் உள்ளனரா என கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து மகப்பேறு மற்றும் உள் நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.