காஞ்சிபுரம்: கோயில் சொத்து, ஆபரண விவரம் பதிவேற்ற ஆய்வாளர்களுக்கு மடிக்கணினி!
இந்து சமய அறநிலையத்துறை கோயில்களின் சொத்துக்கள், ஆபரண விபரங்களை பதிவேற்ற ஆய்வாளர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
தமிழகத்திலுள்ள திருக்கோயில்களின் சொத்துக்கள் மற்றும் நகை ஆபரணங்கள் உள்ளிட்டவைகள் குறித்து முறையான பதிவேடுகள் இல்லை என்பதும் இது குறித்து பல்வேறு புகார்கள் உள்ளது.
இதனை போக்க இந்து சமய அறநிலையத்துறை. அமைச்சர் சேகர்பாபு பதவியேற்றவுடன் இந்து சமய அறநிலைத்துறை வெளிப்படைத்தன்மை கொண்ட துறையாக விளங்கும் எனவும் விரைவில் திருக்கோயில்கள சொத்துக்கள் மற்றும் ஆபரணங்கள் குறித்த விவரங்கள் இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மண்டல இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெயராமன் உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் திருக்கோயிலின் ஆய்வாளர்களுக்கு இன்று இணை ஆணையர் ஜெயா மடிக்கணினிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, விரைவில் இவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களிலின் அனைத்து சொத்துக்கள் மற்றும் ஆபரணங்கள் குறித்து பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தினர்.