காஞ்சிபுரம் : பொதுமக்கள் தொடர் எதிர்ப்பால் அரசு மதுபான கடை மூடல்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வந்த அரசு மதுபானக்கடை பொதுமக்களின் தொடர் எதிர்ப்பால் மூட கலெக்டர் உத்தரவிட்டார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி சாத்தான் குட்டை தெரு. இப்பகுதியில் புகழ்பெற்ற சந்தவெளி அம்மன் கோயில் இப்பகுதியை சுற்றி ஆயிரம் குடியிருப்புக்கு மேல் உள்ள நிலையில் அப்பகுதியில் இயங்கி வந்த அரசு மதுபானக்கடை பொது மக்களுக்கு பெரிதும் இடையூறாக இருப்பதாக தொடர்புகள் எழுந்து வந்தது.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் முதலமைச்சரின் தனிப்பிரிவில் இது குறித்து புகார் அளித்தார். இதற்கு டாஸ்மார்க் விரிவாக்கம் பதிலளிக்கையில் அப்பகுதி குடியிருப்பு இல்லை என தெரிவித்ததால் மீண்டும் சர்ச்சை எழுந்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் திங்கள்கிழமை குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரும் மீண்டும் மனு அளித்தனர் இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக அரசு மதுபானக் கடையை மூட மற்றும் இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் கடையை மூடி உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கை அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.