காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆண்களே அதிகளவில் வாக்களிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 173 வாக்குகள் இருந்த நிலையில், ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 127 வாக்குகள் பதிவாகியது. இதில் ஆண்கள் 66.38சதவீதமும், பெண்கள் 62.27 சதவீதமும் வாக்களித்துள்ளனர்.
நகராட்சிகளில் பொருத்தவரையில் 82 ஆயிரத்து 846 வாக்காளர் கள் இருந்த நிலையை 56 ஆயிரத்து 986 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இதில் ஆண்கள் 69.64சதவீதமும், பெண்கள் 67.99சதவீதமும் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
பேரூராட்சியில் பொருத்தவரை 58 ஆயிரத்து 530 வாக்காளர்களில் 43 ஆயிரத்து 93 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதில் ஆண்கள் 75.12 சதவீதமும் , பெண்கள் 72.25 சதவீதமும் வாக்கு செலுத்தியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 66.56சதவீத ஆண்களும் , 65.20சதவீத பெண்களும் வாக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆண்கள் பெண்களைக் காட்டிலும் 1.36 சதவீதம் அதிகமாக வாக்கு பதிவு செய்துள்ளனர்.