காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 239 பள்ளிகள் திறக்கப்படுகிறது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 239 பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ். அருள்செல்வன் தகவல்
HIGHLIGHTS
தமிழகத்தில் நாளை 9ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 239 பள்ளிகளில் சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. அரசு மற்றும் சுயநிதி , அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகள் என 63 மேல்நிலைப் பள்ளிகளும் 63 உயர்நிலைப் பள்ளிகளும் உள்ளது. இதேபோல் 16 உயர்நிலைப் பள்ளிகளும் 44 மேல்நிலைப் பள்ளிகளும் மெட்ரிக் பள்ளிகள் ஆக உள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளைப் பொறுத்தவரை 17 உயர்நிலைப் பள்ளிகளும் 35 மேல்நிலைப் பள்ளிகளும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை முதல் திறக்கப்பட உள்ளது. இதற்காக பள்ளிகளை சுத்தம் செய்தல், கழிவறை, குடிநீர் தொட்டி சுத்தம் செய்தல் போன்ற இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
மாவட்டத்திலுள்ள 7095 ஆசிரியர்களில் 6 ஆயிரத்து 520 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளாதாகவும் , 86 சதவீதம் பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வன் தெரிவித்துள்ளார்.
மேலும் தடுப்பூசி எடுத்துக்கொண்டே சான்றிதழ் எடுத்துக் கொண்டு வர வேண்டுமென ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தடுப்பூசி செலுத்தாதவர்கள் அதற்கான மருத்துவ சான்றிதழை வைத்திருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்