காஞ்சிபுரத்தில் 2வது மாடியிலிருந்து குதித்த பள்ளி மாணவன் உயிர் தப்பிய அதிசயம்
காஞ்சிபுரத்தில் 2வது மாடியிலிருந்து குதித்த பள்ளி மாணவன் உயிர் தப்பிய அதிசயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அருகே ஆர்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவன் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகின்றார். இந்த மாணவன் தனது பள்ளியில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
மாலை 4 மணிக்கு பள்ளியில் மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவனை 5.30 மணிக்கு அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக மாணவனின் பெற்றோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவனுக்கு கை மற்றும் கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. மூக்கு பகுதியில் அதிகமாக இரத்தம் வெளியேறி வருகின்றது.
மாணவன் காயமடைந்த தகவலை தொடர்ந்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் பள்ளி முதல்வர் மற்றும் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு முதலுதவி கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவர் மாணவனுக்கு ஸ்கேன் எடுக்க அறிவுரை வழங்கியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவி மர்மமான உயிரிழந்து பள்ளி சூறையாடிய சம்பவம் அடங்குவதற்க்குள் காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்கட்ட விசாரணையில் பள்ளி ஆசிரியர் மாணவனை அடித்ததால் மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவன் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.