இரும்பு விலையை நிலைப்படுத்த வேண்டும் : காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு
இரும்பு விலையை நிலைப்படுத்த கோரி கிரில் தயாரிப்பாளர் நலச்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
HIGHLIGHTS
தமிழகத்தில் தயாரிப்பாளர்கள் பொதுநல சங்கத்தின் அங்கமான காஞ்சிபுரம் கூட்டுறவு பிரிவில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது..
அதில் , கட்டுமானத் துறையில் முக்கியப் பொருட்களான மணல் சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகள் ஆகியவற்றின் விலையேற்றம் மற்றும் கொரோனா ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பெட்ரோல் டீசல் விலை காரணமாக மீண்டும் அனைத்து கட்டுமான பொருட்களின் விலை விண்ணைத் தொட்ட நிலையை இதனை சார்ந்த தொழிலாளர்கள் அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
ஊரடங்கு காலத்தில் சிறு குறு குறு தொழில் மேம்பாட்டிற்கு மத்திய அரசு 20 லட்சம் கோடி நிதி உதவி அளித்து அந்த உதவி எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை.
கவனத்தை ஈர்க்கவே மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தமிழ்நாடு கிரில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டலத் தலைவர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் ஏகாம்பரம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.