/* */

வரதராஜ பெருமாள் கோவில் உண்டியல் எண்ணும் பணி துவக்கம்

108 திவ்ய தேசங்களில் ஒன்றான வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த 13 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

வரதராஜ பெருமாள் கோவில் உண்டியல் எண்ணும் பணி துவக்கம்
X

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உண்டியல் எண்ணும் பணிகளை ஆய்வு மேற்கொள்ளும் செயல் அலுவலர்கள் 

காஞ்சிபுரம் புகழ்பெற்ற அத்திவரதர் ஆலயம் என அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் திருக்கோயில் உண்டியல் எண்ணும் பணி துவங்கி உள்ளது.

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு திவ்ய தேச தலங்களும், பரிகார தலங்களும் அமைந்துள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகம் மட்டுமில்லாது பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வகையில் புகழ்பெற்ற அத்தி வரத திருக்கோயில் என அழைக்கப்படும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் திருக்கோயில் வளாகத்தில் 10 உண்டிகளும், வெளி பிரகாரத்தில் மூன்று உண்டிகளும் என 13 உண்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியதை எண்ணும் தனியார் ஆன்மீக குழு‌ ஊழியர்கள்.

மூன்று மாதங்களுக்கு பிறகு இன்று காலை 10 மணி அளவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி அறிவுரை பேரில், உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி வழிகாட்டுதல் பேரில் கோயில் செயல் அலுவலர் சீனிவாசன் , சுரேஷ் ஆய்வாளர் பூங்கொடி முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு , 50க்கும் மேற்பட்ட பக்தர்களை கொண்டு எண்ணப்பட்டு வருகிறது.

கடந்த ஜூன் மாதம் எண்ணபட்ட நிலையில் அப்போது பக்தர்கள் காணிக்கையாக 29 லட்சம் செலுத்தி இருந்ததனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்டியல் என்னும் பணியில் ஈடுபட்ட உள்ள ஊழியர்களுக்கு தேவையான குடிநீர் உணவு உள்ளிட்டவைகளை திருக்கோயில் ஊழியர்கள் அவ்வப்போது அளித்து வருகின்றனர்

மேலும் உண்டியல் என்னும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் என்னும் காட்சிகளை பதிவு செய்ய வீடியோ கேமரா அமைக்கப்பட்டுள்ளது.

Updated On: 21 Sep 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  4. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  5. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  7. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  8. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  9. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு