/* */

காஞ்சிபுரத்தில் கனமழை, விவசாயிகள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் கனமழை, விவசாயிகள் மகிழ்ச்சி
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மண்டலம் அறிவித்தது.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் காலை முதலே கடும் வெப்பம் சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் மாலை 7 மணி முதல் பலத்த காற்று வீச துவங்கி சிறிது நேரத்திலேயே மெல்ல மழை பெய்யத் துவங்கியது.

சிறிது நேரத்திலேயே இடியுடன் கூடிய கனமழை காஞ்சிபுரம் வாலாஜாபாத் உத்திரமேரூர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை என பல இடங்களில் பெய்ய தொடங்கியது.

கனமழையால் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகரின் முக்கிய சாலைகளில் போதிய வெளிச்சம் இன்மை மற்றும் கனமழை காரணமாக வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டது.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் இன்றும் இரவு நேரங்களில் மழை பெய்வதால் பொதுமக்களுக்கு சற்று சிரமம் இல்லாத நிலை உருவாகியது.

தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாய பணிகள் துவக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 8 July 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  7. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  9. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  10. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....