/* */

காஞ்சிபுரம் பிரபல தனியார் பட்டு நிறுவனத்தில் ஜிஎஸ்டி வரித்துறையினர் சோதனை

பிரபல தனியார் பட்டு நிறுவனத்தில் சென்னை மற்றும் பாண்டிச்சேரி ஜிஎஸ்டி வரித்துறை அலுவலர்கள் கடை மற்றும் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

HIGHLIGHTS

காஞ்சிபுரம் பிரபல தனியார் பட்டு நிறுவனத்தில் ஜிஎஸ்டி வரித்துறையினர் சோதனை
X

காஞ்சிபுரம் நகரில் இயங்கி வரும் பிரபல தனியார் பட்டு நிறுவனத்தில் வருமான வரித்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுற்றுலாத் தலமானதும்,பட்டு நகரம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை நடுத் தெருவில் பிரபல தனியார் பட்டுச் சேலை விற்பனை கடையான ஏ.எஸ்.பாபு சா பட்டுச்சேலை விற்பனை கடை இயங்கி வருகிறது. இக்கடையில் நாள்தோறும் ஆந்திரா,கர்நாடக, பெங்களூர் உள்ளிட்ட வெளி மாநில, வெளி மாவட்ட மற்றும் சுற்றுலா பயணிகள் என பல ஆயிரக்கணக்கானோர் பட்டுச் சேலைகளை வாங்கி செல்வர்.

மேலும் நாள்தோறும் பல கோடிகளுக்கு வர்த்தகம் நடைபெறும் இக்கடையில் அவ்வப்போது வருமான வரித்துறையினரின் சோதனைகளும் நடைபெற்று,பல்வேறு ஆவணங்களை எடுத்து செல்வதுமாக இருக்கும்.

இந்நிலையில் தற்போது தீபாவளி,கிருஸ்துமஸ்,புத்தாண்டு மற்றும் பொங்கல் ஒட்டி இக்கடையில் விற்பனை களைகட்டிய நிலையில் இன்றைய தினம் இக்கடையில் ஜிஎஸ்டி வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை காரணமாக கடையில் பட்டுச்சேலை வாங்க வந்தவர்கள் அனைவரும் கடையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

மேலும் வீடு கடை உள்ளிட்ட இடங்களில் 10க்கும் மேற்பட்ட வருமானத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இக் கடையில் சோதனை மேற்கொள்வதை அறிந்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களிடம், வருமான வரித்துறை அதிகாரிகள் செய்தியாளர்களை தடுத்து நிறுத்தி செய்தி சேகரிக்க கூடாது என கூறினர்.

செய்தியாளர்கள் கடையின் நுழைவு வாயில் முன்பு இருந்த வீடியோ பதிவு செய்வதை கூட செய்யக் கூடாது, செய்தியை எடுக்க கூடாது என செய்தியாளர்களின் சுதந்தரத்தையும், கடமையையும் செய்ய கூடாது என்ற நோக்கில் தொடர்ந்து செயல்பட்டதால் செய்தியாளர்களுக்கும், துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

வருமானவரித்துறையினரின் இந்த திடீர் சோதனை, மற்ற பட்டுச்சேலை கடை உரிமையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 4 Jan 2023 7:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  2. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  3. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  10. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...