குன்றத்தூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு: மாணவர்கள் மகிழ்ச்சி
மாணவர்கள் கல்வி கற்க ஏதுவாக 5பாட பிரிவுகள் துவங்கவுள்ளதாகவும் , தகுதி அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
HIGHLIGHTS
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இன்று காணொளி காட்சி வழியாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்போது தற்காலிகமாக குன்றத்தூர் சேக்கிழார் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தில் துவக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழக சிறு குறு தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை ஆகியோர் இணைந்து குத்துவிளக்கேற்றி இனிப்புகள் வழங்கினார்.
விழாவில் பேசிய அமைச்சர், பிற்படுத்தட்ட வகுப்பினர்கள் அதிகளவில் வசிக்கும் சட்டமன்ற தொகுதியில் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறக்கபட்டதால் மாணவர்கள் உள்ளிட்ட பலர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்கள் கல்வி கற்க ஏதுவாக 5பாடவிரிவுகள் துவங்கவுள்ளதாகவும் , தகுதி அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தற்காலிகமாக இக்கல்லூரி பள்ளி வளாகத்தில் நடைபெறும் எனவும் அடுத்த ஆண்டுக்குள் புதிய இடத்தில் கல்லூரிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.