/* */

காஞ்சிபுரம் அருகே விவசாய கடன் தள்ளுபடி சான்று வழங்காமல் விவசாயிகள் அலைக்கழிப்பு

கடந்த ஆட்சியில் விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட விவசாய கடன் சான்றிதழ் வழங்காததால் புதிய கடன் பெற இயலவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அருகே விவசாய கடன் தள்ளுபடி சான்று வழங்காமல் விவசாயிகள் அலைக்கழிப்பு
X

விவசாய கடன் தள்ளுபடி சான்று வழங்கக்கோரி காமராஜபுரம், தம்மனூர் கிராம விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் காமராஜபுரம் மற்றும் தம்மனூர் கிராமத்தில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இந்த பகுதி விவசாயிகள் இங்குள்ள பெரிய ஏரியை நம்பிதான் விவசாய தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர்கள் விவசாய கடன் பெற வாலாஜாபாத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை நாடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 2020க்கு முன் பெற்ற விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சிலருக்கு மட்டுமே விவசாய கடன் தள்ளுபடி சான்று வழங்கப்பட்டது.

இக்கிராமத்தை சேர்ந்த பலருக்கு இது வரை கடன் தள்ளுபடி சான்று வழங்கப்படவில்லை. இதனால் இவர்கள் புதிய விவசாய கடன் பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாகவே விவசாயிகள் கூட்டுறவு வங்கியை நாடும்போது முறையான பதில் கூறாமல் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டுகின்றனர். தற்போது தனிநபர் மற்றும் நகை கடன் பெற்று விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும், இதனால் தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என்பதால் விரைவாக விவசாய கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கக்கோரியும், மேற்படி நபருக்கு உடனடியாக புதிய விவசாயக்கடன் வழங்க உத்தரவிடவேண்டும் காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தியிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

Updated On: 8 March 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...