அரசு ஊழியர்கள் பணிக்கு செல்ல கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து ஊழியர்கள் அரசுப் பணிக்கு செல்ல கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க மாவட்ட ஆட்சியர் போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்..
HIGHLIGHTS
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயங்கவில்லை . காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து தலைமை செயலகம் , தாலூக்கா அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு காலை குறிப்பிட நேரத்தில் ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செஙாகல்பட்டு , சென்னை , தாம்பரம் , உத்திரமேரூர், வேலூர் மார்க்கங்களில் அரசு பேருந்துகள் இயங்கினாலும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து நின்று கொண்டே பயணம் செய்யும் நிலைக்கு ஆளாகி வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தனர்.
இதை காரணமாக கூறி அரசு பணிக்கு ஊழியர்கள் காலதாமதமாக வருவதை அறிந்த மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி அரசு ஊழியர்கள் பணிக்கு செல்ல கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார்.