அரசு ஊழியர்களிடம் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எழிலரசன் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் வாக்குகளை சேகரித்தார்.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதில் காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் எழிலரசன் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் வாக்குகளை சேகரித்தார். இதில் ரயில் நிலையத்தின் வெளியே நின்று சென்னை மற்றும் புறநகரில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ரயில் பயணிகளிடம் கடந்த ஐந்தாண்டுகளாக தம்மால் ரயில் பயணிகளுக்கு கொண்டு வரபட்ட திட்டங்கள் , அனுமதி பெற்று நிலுவையில் உள்ள பணிகள் குறித்து விளக்க துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.பின்பு ரயிலில் அமர்ந்திருக்கும் பயணிகளிடமும் வாக்குகளை சேகரித்தார்.இந்நிகழ்வின் போது நகர திமு கழக நிர்வாகிகள்,மகளிரணியினர் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் திமுக வேட்பாளருடன் உடனிருந்து வாக்குகளை சேகரித்தனர்.