Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரம் அருகே குளத்தில் தவறி விழுந்த பூ வியாபாரி சாவு
காஞ்சிபுரம் அருகே குளத்தில் தவறி விழுந்த பூ வியாபாரி மூச்சு திணறலால் பரிதாபமாக உயிரிழந்தார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் அருகே கூரம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (38). இவர் காஞ்சிபுரம் பூக்கடைசத்திரம் பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகின்றார்.
பிரபு இன்று காலை கூரம் பகுதியில் காலை கடன் முடித்துவிட்டு அருகே இருந்த குளத்தில் கால் கழுவும் போது தவறி தண்ணீரில் விழுந்துள்ளார். நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி குளத்திலேயே பிரபு பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரபு குளம் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து இருப்பதை பார்த்த கூரம் பகுதி மக்கள் காவல் துறையினர்க்கு தகவல் தெரியபடுத்தினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த பாலுசெட்டி போலீசார் பிரபுவின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காஞ்சிபுரம் அருகே பூ வியாபாரி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.