காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட மூன்று ரவுடிகள் கைது : எஸ்.பி அதிரடி நடவடிக்கை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 ரவுடிகளை அதிரடியாக தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் எம்.சத்யபிரியா அறிவுறுத்தினார்.
அதன்பேரில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் உத்தரவின் பேரில் மூன்று காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதில் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் 13 வழக்குகளில் சம்பந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி விக்கி என்கிற விக்னேஷ் கைது செய்யப்பட்டார்.
மேலும் மணிமங்கலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி புக்கா மணி என்கிற மணிகண்டன் மீது கொலை, கொள்ளை என ஐந்து வழக்குகள் சம்பந்தப்பட்டு தலைமறைவாக இருந்த அவரையும் கைது செய்தனர்.
இதேபோல் பெருநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மானாமதி கண்டிகை பகுதியை சேர்ந்த இருசக்கர வாகனத் திருட்டு குற்றவாளி செபாஸ்டின் என்பவர் மீது ஆறு குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த அவர்களையும் இந்த தனிப்படையினர் கைது செய்தனர். பின்னர் இந்த மூவரையும் சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை சட்டரீதியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகரன் தெரிவித்துள்ளார்