எஸ்.பி. அலுவலக நுழைவு வாயிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு டிஜிட்டல் பதாகை
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக நுழைவுவாயில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு டிஜிட்டல் பதாகை நிறுவப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அமைந்துள்ளது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
இங்குள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் நாள் தோறும் நூற்றுக்கணக்கானோர் நடைபயிற்சி உடற்பயிற்சி மேற்கொள்ளுகின்றனர். இதுமட்டுமில்லாமல் அரசு வேலை நேரங்களில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் பணி காரணமாக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு செய்ய மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்துள்ளது. மேலும் காஞ்சி மண்டல காவல்துறை துணைத் தலைவர் சத்யபிரியா ஆலோசனையின் படி, மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர் எஸ்.பி அலுவலக நுழைவு வாயிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த டிஜிட்டல் பாதாகை நிறுவியுள்ளார் .
இதில் முக கவசம் அணிதல் , தனிமனித இடைவெளி உள்ளிட்ட விழிப்புணர்வு தரும் விளம்பரங்கள் டிஜிட்டல் முறையில் ஓளிபரப்பி வருகின்றனர். இச்செயலை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.