அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி காஞ்சியில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் மாவட்ட தலைவர் , துணைமேயர், நகர தலைவர் தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
HIGHLIGHTS
மத்திய அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில் குறைந்த கால ஆண்டுகளில் பணி வழங்க அக்னிபாத் எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இளைஞர்களை சீரழிக்கும் திட்டம் என எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வன்முறைகளுடன் நடந்து முடிந்தது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அளவூர் நாகராஜன் துணை மேயர் குமரகுருநாதன், நகர தலைவர் நாதன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்களை மத்திய அரசுக்கு எதிராக எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
30நிமிடம் நடந்த இந்த ஆர்பாட்டத்தில் இத்திட்டத்தினால் இளைஞர்களின் வாழ்வு சீரழியும் எனவும், இதன் தீமைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் பத்மநாபன் , அன்பு, பார்த்தசாரதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.