/* */

காஞ்சிபுரத்தில சுதந்திர தினவிழா கலெக்டர் ஆர்த்தி தேசிய கொடி ஏற்றினார்

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தேசிய கொடியை ஏற்றிவைத்து, ரூ 49 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில சுதந்திர தினவிழா கலெக்டர் ஆர்த்தி தேசிய கொடி ஏற்றினார்
X

காஞ்சிபுரத்தில் கலெக்டர் ஆர்த்தி தேசிய கொடியேற்றி வீர வணக்கம் செலுத்தினார்.

இந்திய திரு நாட்டின் 75வது பொன்விழா சுதந்திர தின விழா நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா காவல் அரங்கத்தில் தேசியக் கொடியினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம் சுதாகர் தலைமையிலான காவல்துறை அணிவகுப்பை மரியாதையை ஏற்றுக்கொண்டு, சுதந்திர தின விழாவையொட்டி வண்ண பலூன்கள் மற்றும் சமாதானப் புறாக்களை பறக்க வைத்தார்.

மேலும் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக 76 பயனாளிகளுக்கு ரூ 49.33 லட்சம் மதிப்பிலான நல திட்ட உதவிகளை வழங்கினார்.

கொரோனா காலகட்டத்தில் முன் களப்பணி அலுவலர்களாக பணியாற்றியவர்களுக்கு பூங்கொத்து , இனிப்புகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

இவ்விழாவில் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் எம். சத்யபிரியா மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் பங்குபெற்றனர்.

Updated On: 16 Aug 2021 3:51 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  4. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  5. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  6. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  9. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  10. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!