சிறு மேம்பாலம் அமைத்து தர கோரி கலெக்டரிடம் அதிமுக ஒன்றிய செயலாளர் மனு
வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த தயார்குள சிறு பாலத்தை சீரமைக்க கோரி அதிமுக ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் கலெக்டரிடம் மனு அளித்தார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறம் அமைந்துள்ளது எம்ஜிஆர் நகர்.காஞ்சிபுரம் மாநகராட்சிக்குபட்ட பகுதியான இப்பகுதியில் கடந்த வடகிழக்கு பருவமழை காரணமாக வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு பகுதியை ஒட்டியுள்ள குடிசைப் பகுதிகளில் நீர் சூழ்ந்து பெரும் ஆபத்தை விளைவித்தது.
இந்நிலையை போக்கிட மாநகராட்சி அப்பகுதியில் செல்லும் காங்கிரீட் சிறு பாலத்தை உடைத்து நீர் வெளியேற வழி வகை செய்து அதன்பின் தற்காலிகமாக உருளைக் கொண்டு சாலை அமைத்து நகராட்சி மின் தகன மயானம் மற்றும் அப்பகுதி வழியாக செல்ல ஏற்பாடு செய்தது.
இந்நிலையில் அதிமுக ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் உடைக்கபட்ட இடத்தில் புதிய சிறிய ரக மேம்பாலம் அமைத்து அப்பகுதி போக்குவரத்திற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்தார்.