/* */

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் அதிகாலை சந்தேகத்திற்குரிய வாலிபரிடம் 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
X

சிவகாஞ்சி காவல்நிலையம் ( பைல் படம்) 

காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அண்ணா பேருந்து நிலையத்தில் இரவு 11மணி வரையிலும், அதேபோல் அதிகாலை 2 மணியிலிருந்தும் வெளிமாவட்ட பேருந்துகள் வந்து செல்லும்.

சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இப்பகுதியில் சுழற்சி முறையில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை காவல்துறையினர் பாதுகாப்பு கருதி வலம் வருவது வழக்கம்.

இந்நிலையில், இன்று அதிகாலை சிவகாஞ்சி காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டபோது, வேலூர் மற்றும் திருச்சி பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்குரிய நபர் ஒருவர் கையில் பையுடன் இருந்ததைக் கண்டு காவல் ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது, மதுரையை சேர்ந்த நபர் என்பதும் அவர் பெயர் ஓச்சப்பன் எனவும் அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது கஞ்சா பார்சல் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அந்த நபரை சில காஞ்சி காவல் நிலையத்தில் வைத்து யாரிடம் கொடுத்து வந்தார்? எங்கிருந்து இந்த பார்சல் கொண்டுவரப்பட்டது? என்பது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 16 Sep 2021 4:59 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...