தமிழக அரசின் 100நாள் சாதனை - காஞ்சி முழுவதும் துண்டு பிரசுரங்களை வழங்கினர்
தமிழகத்தில் திமுக அரசு பதவி ஏற்ற 100 நாளில் 100 சாதனைகள் என்ற துண்டுப் பிரசுரத்தில் காஞ்சிபுரம் நகர திமுக சார்பில் செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் நகர் முழுவதும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
HIGHLIGHTS
நடந்து முடிந்த 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பத்தாண்டுகளுக்கு பிறகு பிடித்தது. தேர்தலின்போது திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை தமிழக மக்கள் நலன் சார்ந்து அறிவித்தார்.
அதன் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ4ஆயிரம் கொரோனா சிறப்பு நிவாரணம் , பால்நிலை குறைப்பு , பெட்ரோல் டீசல் விலை ரூ3குறைப்பு , கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் பணியாற்றிய முன் களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, பொது மற்றும் வேளாண்மை என இரண்டு நிதிநிலை அறிக்கை என 100நாட்களில் பொதுமக்கள் நலன்கருதி 100 அறிவிப்புகள் என தொடர்ந்து சாதனைகளாகி வருகிறது.
தமிழகம் திமுகவினர் இன்று காலை முதல் 100 நாட்களில் 100 சாதனைகள் என சாதனைகள் அனைத்தையும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் பொது மக்களுக்கு வழங்கி தெரிவித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் நகர செயலாளர் சன்பிராண்ட்.கே.ஆறுமுகம் தலைமையில் பொது மக்களுக்கு இன்று மாலை வழங்கப்பட்டது. உடன் மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன், பொதுக்குழு உறுப்பினர் கே.ஏ.செங்குட்டுவன், நகர நிர்வாகிகள் எஸ்.சந்துரு, ஜி.கருணாநிதி, வ.ஜெகன்நாதன், மாவட்ட பிரதிநிகள் எஸ்.சுகுமாரன், ஜி.குமரேசன், த.விஸ்வநாதன், எஸ்.மாமல்லன், வட்ட கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள், வட்ட கழக நிர்வாகிகள், கழக அணிகளின் மாவட்ட, நகர, வட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் உள்பட கழகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.